குறுங்காடுகள் திறப்பு விழா – அமைச்சர் ஆர். காந்தி மற்றும் கார்த்திகேய சிவசேனாதிபதி திறந்து வைத்தார்
முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 99 வது பிறந்த நாள் விழா கொண்டாட்டம் விதமாக 13.06.22ஆம் தேதி அமைக்கப்பட்ட குறுங்காடுகள் திறப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் மாவட்ட கழக செயலாளர் ராணிப்பேட்டை சாதனை செம்மல் மாண்புமிகு R .காந்தி கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் , திரு.கார்த்திகேய சிவசேனாதிபதி மாநில சுற்றுச்சூழல் அணிச் செயலாளர் அவர்கள் ,திரு ஜே .எல் ஈஸ்வரப்பன் ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர், திரு ஆர் வினோத் காந்தி மாநில சுற்றுச்சூழல் அணி துணைச் செயலாளர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை வெகுவிமர்சையாக சிறப்பித்தனர் .மற்றும் நெமிலி மேற்கு ஒன்றிய அமைப்பாளர் N.D.ஹரி சங்கர் (மேலபுலம்புதூர்) துணை அமைப்பாளர்கள் சிலம்பரசன்,ராஜராஜன், பரத் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்கள் வரவேற்று உடனிருந்து நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
இந்நிகழ்ச்சியில் ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து ஒன்றிய கழகச் செயலாளர்கள், மாவட்ட பொறுப்பாளர்கள், மாவட்ட அவைத் தலைவர்கள், மாவட்ட பொருளாளர் அனைத்து சுற்றுசூழல் ஒன்றியம் பேரூர் நகரம் ஆகிய அனைத்து அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
PLEASE SUBSCRIBE TO OUR YOUTUBE CHANNEL – CLICK HERE
JOIN TELEGRAM GROUP LINK – CLICK HERE